Skip to content

நெடுங்குருதி (தேசாந்திரி)

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நெடுங்குருதி (தேசாந்திரி) - வேம்பலைச் சாபம், தலைமுறைகளின் வாதைகள், மனிதர்களின் ஏக்கங்கள் நிறைந்த ஒரு பிரமாண்ட நாவல் இது.

Category Novel
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக்கனவைக் கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலைகொள்ள முடியாத தத்தளிப்புகளும் ஆசாபாசங்களின் இருளும் வெளிச்சமும் இந்நாவலில் முடிவற்ற குருதிப் பெருக்காகின்றன. பொருளற்ற வாழ்வும் மரணமும் தங்கள் வசியக் குரலால் வேம்பலையை நோக்கி மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு பிரமாண்டமான கனவின் திரைமீது அறியப்படாத யதார்த்தம் ஒன்றை எழுதுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இந்நாவல்.