Skip to content

வரலாறு என்னை விடுதலை செய்யும்

ஃபிடல் காஸ்ட்ரோ எழுதிய வரலாறு என்னை விடுதலை செய்யும் - கியூபப் புரட்சியின் பின்னணி, அரசியல் எழுச்சி, லத்தீன் அமெரிக்க விடுதலைக்கான உத்வேகம் நிறைந்த புத்தகம்.

Category Speech
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 60
Year 2016
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

"வரலாறு என்னை விடுதலை செய்யும்" - தீர்க்கதரிசனமான இந்த வார்த்தைகளை ஃபிடல் காஸ்ட்ரோ உதிர்த்தபோது, 1953-ல் மன்கடா படைத்தளத்துக்கு எதிரான தாக்குதலில் தோல்வியடைந்ததன் காரணமாக தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின்போது தன் தரப்பை நீண்ட வாதமாக முன்வைத்தார். வாதத்தின் இறுதியில் அவர் உதிர்த்த வார்த்தைகளே மேற்கண்டவை.

வழக்கில் 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மக்கள் எதிர்ப்பால் இரண்டே ஆண்டுகளில் விடுதலையானார். மெக்ஸிகோ சென்று ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் புரட்சிப் படையைத் தயார் செய்துகொண்டு கியூப அரசு மீது தாக்குதல் தொடுத்தார். ஃபிடல் வென்றார். மக்கள் அவர் பக்கம் நின்றனர். மக்களின் விடுதலைக்காக உளப்பூர்வமாகவும் மனஉறுதியுடனும் போராடும் ஒருவரால் மட்டுமே ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்ற வார்த்தைகளைச் சொல்ல முடியும். புகழ்பெற்ற இந்த உரையை 1983-லேயே மொழிபெயர்த்து வெளியிட்டவர் வீ.பா. கணேசன். காஸ்ட்ரோவின் மறைவையடுத்து ஒன்பது முறையாக மறுபதிப்பு காணும் இந்தப் புத்தகத்தில் காஸ்ட்ரோவின் கால வரிசை வாழ்க்கைக் குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

உலக அரசியல்-பொருளாதார ஏகாதிபத்தியங்களின் தலைவனாய் செயல்படும் அமெரிக்காவின் எல்லைப்பகுதியில் நிலைபெற்று, அதன் அச்சுறுத்தல்களை துச்சமென தூக்கியெறிந்த சின்னஞ்சிறு கியூபாவின் வரலாற்றை மாற்றி எழுதியவர் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ. லத்தீன் அமெரிக்காவின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தவர். பல நூற்றாண்டுகால ஸ்பானிய, அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக, கொடுங்கோலன் பாடிஸ்டாவிற்கு எதிராக இளைஞர் படைத் தலைவராய் 1953இல் நீதிமன்றக் கூண்டில் நின்றபடி “வரலாறு என்னை விடுதலை செய்யும்!” என அவர் எழுப்பிய கலகக் குரல் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல; உலக மக்கள் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இந்த எழுச்சியுரை இப்போது தோழர் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கான ஓர் அஞ்சலியாய் வெளிவருகிறது.