தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும் (1801-1947)
ஒரு சமூகப் பொருளியல் பார்வை
ஏ. கே. காளிமுத்து எழுதிய தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும் (1801-1947) - காலனித்துவத்தின் தாக்கம், விவசாயிகளின் எழுச்சி, நவீன விவசாய இயக்கங்கள் குறித்த விரிவான ஆய்வு.
| Category | History |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 248 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
வரி விதிப்பின் இயல்பு, தாழ்நிலை விவசாயிகள் மீது அவை ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது இந்நூல். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அன்று நிகழ்ந்த விவசாயிகளின் எழுச்சிகளுக்கு இட்டுச் செல்கிறது. அநேகமாக, இதுதான் தமிழ்நாட்டில் கூட்டுச் செயல்முறையில் நிகழ்ந்த விவசாயிகளின் எழுச்சிகளைப் பற்றி ஆய்வு செய்வதில் முதல் முயற்சியாகும். தொடக்ககால முதலாளித்துவம், காலனிய அரசாங்கத்தின் ஏற்றுமதிக் கொள்கை ஆகியவை குறித்தும் விரிவாக விவாதித்திருக்கிறார். விவசாயத்தை வர்த்தக மயமாக்கியதானது, விவசாய உற்பத்தியின் இயல்பையே மாற்றியது. பெரும் பொருளாதார முடக்கத்தின் போதும் அதற்கு பிந்தைய காலத்திலும் நிலவிய விவசாய நிலைமைகள் குறித்தும் ஒரு ஆழமான ஆய்வு செய்திருக்கிறார். இந்த ஆய்வின் மூலம், தமிழ்நாட்டில் உருவாகிய நவீன விவசாய இயக்கங்கள் குறித்த விபரங்களை சேகரித்து ஆய்ந்துள்ளார்.