சர்வாதிகார இந்துத்வா மாடலுக்கு திராவிடமாடல் மாற்றாகுமா?
வே. மீனாட்சி சுந்திரம் எழுதிய சர்வாதிகார இந்துத்வா மாடலுக்கு திராவிடமாடல் மாற்றாகுமா? - திராவிட அரசியல், இந்துத்வா மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த ஆழமான அலசல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தமிழ்நாட்டில் மட்டுமே ஆரிய, திராவிடப் பண்பாட்டு முரணைச் சுற்றி அறிவுலம் சமூக, அரசியல் பிரச்சினைகளை அலசுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழ்நாடு உட்பட இன்றைய இந்தியாவில் இவர்கள் சொல்லக்கூடிய ஆரியமும் திராவிடமும் கலந்து இனம் தெரியாமல் போய் சில ஆயிரம் ஆண்டுகளாவது இருக்கும்
என்பதை வரலாறு உணர்த்துகிறது.
ஆரியமும் திராவிடமும் இரண்டறக் கலந்துவிட்ட பிறகு அதைப் பிரித்து அரசியல் பண்ணுவது ஒரு வகை பழைமைவாதமாகும். ஆரியமோ, திராவிடமோ நமது அரசியல் பண்பாட்டில் களைய வேண்டியதை, தேடி அழிக்க வேண்டியவைகளை விவாதிப்பதே இப்படைப்பின் நோக்கமாகும்.