மூன்று குண்டு மனிதர்கள்
யூரி ஒலெஷா எழுதிய மூன்று குண்டு மனிதர்கள் - சமூக அநீதிக்கு எதிரான போராட்டத்தையும், சிறுமியின் துணிச்சலையும் அறிய ஒரு சிறந்த நாவல். மூன்று குண்டு மனிதர்கள் பற்றிய கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 10 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
Description
மூன்று பணக்கார மனிதர்கள், மக்களுடைய உழைப்பைத் திருடிச் சாப்பிட்டு குண்டாகி விடுகிறார்கள். மக்களோ கடுமையாக உழைத்தாலும் பட்டினியால் மெலிந்து வாடுகிறார்கள். பிராஸ்பெரோ என்கிற போர்க்கருவிகள் செய்பவர், டிபுல் என்கிற சர்க்கஸ் கழைக்கூத்தாடி, காஸ்பர் என்கிற விஞ்ஞானி, சுவாக் என்கிற துணிச்சலான சிறுமி ஆகியோரின் உதவியுடன் குண்டு மனிதர்களின் அரண்மனைக்கு எதிராக மக்கள் திரள்கிறார்கள். இந்தப் போராட்டத்தை வழிநடத்தும் பிராஸ்பெரோ கைது செய்யப்படுகிறார், சிறுமி சுவாக்கும் சிக்கிக்கொள்கிறாள். அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள்?
இக்கட்டான தருணத்தில் அரண்மனைக் காவலர்கள் என்ன செய்கிறார்கள்? மக்கள் எதிர்ப்பை மீறி குண்டு மனிதர்கள் தப்பித்தார்களா?
