Skip to content

கடலுக்கு அடியில் மர்மம்

சி. சரிதா ஜோ எழுதிய கடலுக்கு அடியில் மர்மம் - சிறுவர்களுக்கான அற்புதமான கதை! கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மர்மங்கள் நிறைந்த ஒரு சாகசப் பயணம்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Adventure and Exploration

Description

குழந்தைகளுக்கு கதை சொல்வது ஒருவகை. குழந்தைக் கதை சொல்வது இன்னொரு வகை. எழுத்தாளர் சரிதா ஜோவின் வகை வேறாக இருக்கிறது. சிறார் கதையை பெரியவர்களுக்கும் சொல்லலாம். ஆனால் பெரியவர் கதையை சிறார்களுக்குச் சொல்ல முடியுமா? முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்றே சொல்வேன்.

பெரியவர்கள் புழங்கும் டீ கடைகளில் ‘இங்கே அரசியல் பேசாதே’ என வாசகம் எழுதியிருக்கும்போது சரிதா ஜோ அவர்கள் தனது கதை மூலம் சிறார்களுக்கு அரசியல் வகுப்பு எடுத்திருப்பதும் அதுவும் சிறார் மனதை அழுத்தாமல் பார்த்துக் கொண்டதும் பாராட்டுக்குரியது. இதுவரை மனித சமூகம் நடமாடும் பொது வெளியையும் காடுகளையும் தனது கதைகளின் கருவாகக் கொண்டெழுதிய எழுத்தாளர் முதன் முறையாக கடலுக்குள் பயணித்திருப்பது எளிதான விசயமில்லை. கடல் பற்றியும் அதனுள் வாழும் உயிரினங்கள் பற்றியும் ஒரு தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டே இந்த “கடலுக்கு அடியில் ஒரு மர்மம்” சிறார் குறுநாவலை எழுதியிருக்க வேண்டும்.