Skip to content

அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்

தன்பெருக்கி நாவல்

எம். ஜி. சுரேஷ் எழுதிய அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் - காலப் பயணமும், சரித்திரமும், சமூகப் பார்வையும் கலந்த ஒரு திகைப்பூட்டும் நாவல். அலெக்ஸாண்டரின் வாழ்க்கைச் சிக்கல்களை ஆராய்கிறது.

Category Novel
Publisher அடையாளம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 392
Year 2011
Format Paperback
Tags Philosophy and Thought

Description

இந்த நாவலின் கதாநாயகன் அலெக்ஸாண்டர் புலம் பெயர்ந்தே தன் வாழ்க்கையைக் கழித்தவன். இதனால் இருத்தலின் நிச்சயமின்மை அவன் மனத்தின் சமனிலையை எந்த நேரமும் குலைக்கத் தயாராக இருக்கிறது. விதி அவன் காதுகளைப் பிடித்து இழுத்து எல்லாக் காலங்களுக்கும் கொண்டு போகிறது. அந்தக் காலங்களினூடான பயணத்தில் இவன் தன்னைப் பல அலெக்ஸாண்டர்களாகப் பெருக்கிக் கொள்கிறான். அவனுக்கேற்ப இந்த நாவலும் தன்னை ஏக காலத்தில் ஒரு சரித்திர நாவலாக, சமூக நாவலாக, துப்பறியும் நாவலாக பல வகைமைகளில் தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. மூர்க்கத்தனமான கடந்தகாலத்தின் நீட்சியாக, குரூரமான நிகழ்காலம் கட்டப் பட்டிருக்கிறது. இந்த நிகழ்காலத்தின் நீட்சியாக வரவிருக்கும் எதிர்காலம் எத்தகைய விபரீத சாத்தியங்களை முன் வைக்க இருக்கிறது என்பதையும், எல்லா அலெக்ஸாண்டர்களும் ஒரே அலெக்ஸாண்டரே என்பதையும் இறுதியில் அறிய நேரும் வாசகனை இந்த நாவல் திகைப்பில் ஆழ்த்துகிறது.