Skip to content

மக(ர்)ராசன்

எஸ். நடராஜன் எழுதிய மக(ர்)ராசன் - அம்பேத்கர் குறித்த சமூக நீதி, சமத்துவம் மற்றும் தலித் மக்களின் வாழ்வு குறித்த ஒரு முக்கியமான புத்தகம்.

Category Essay
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 128
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பொதுவாகப் பெரியோர்களை “மகராசன்” என்று வாஞ்சை கலந்த மரியாதையுடன் அழைப்பதுண்டு; அண்ணல் அம்பேத்கரும் மகராசனே! இதையும் தாண்டி, “மகர்” என்றழைக்கப்படும் தலித் மக்களின் இராசன் அவர் - எனவே அவர் “மக(ர்)ராசன்!”

வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால், இப்புத்தகத் தலைப்பில் குறையிருப்பதைக் காணமுடியும் - அண்ணல் அம்பேத்கர் மகர்களுக்கு மட்டுமா இராசன்? சமூகநீதியையும், சமத்துவத்தையும் கண்ணெனப் போற்றி அவற்றைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் அல்லவா அவர் இராசன்!

அண்ணல் அம்பேத்கருக்கும், கார்ல் மார்க்சுக்கும் ஒருவிதத்தில் ஒற்றுமையுண்டு- நாட்டில் அனேகருக்கு இவ்விருவரைப் பற்றித் தெரிந்திருக்கும்; அவர்களில் சிலருக்கு இவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்திருக்கும்; அவர்களுள் சிலருக்கு இவர்கள் கூறிச்சென்ற கருத்துகள், அறிவுரைகள் தெரிந்திருக்கும்; அவர்களில் வெகுசிலரே இவ்விருவர் காட்டிய வழியில் பயணிப்பர்!

- S. நடராஜன்