Skip to content

தேர்தல் கதைகள்

அலோக் ஷுக்லா எழுதிய தேர்தல் கதைகள் - இந்திய தேர்தல் களத்தின் பின்னணியில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும், தேர்தல் ஆணையத்தின் சவால்களும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.

Category Short Story
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 168
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சுதந்திரத்தை மதிக்கும் ஒவ்வொரு இந்தியனும் படிக்கவேண்டிய புத்தகம்.

உங்கள் ஆர்வத்தை ஈர்த்துப்பிடிக்கும் சிறுகதைகளின் இந்தத் தொகுதி வாழ்வின் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்தியாவின் தேர்தல் அரசியலில் நம்பமுடியாத நிகழ்வு என்பது மக்களை வீடுவீடாக சென்று சந்திப்பது. நூற்றாண்டுகளாக அந்நியர்களிடம் அடைமைப்பட்டுக் கிடந்த, ஏழ்மையான, வளரும் நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தின் வெற்றி. அது ஒரு அற்புதத்திற்கு இணையானது.

எழுபத்தைந்து சுதந்திர வாழ்க்கையைக் கடந்துவிட்டோம். இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் அந்த சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்தவர்களாக இல்லை. தேர்தல் நடைமுறை என்பது மனிதனின் சுவாசத்தைப்போல வாழ்வின் ஒரு அங்கம். சுதந்திரமான, சமத்துவமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு இந்திய அரசியலமைப்பு தனிப்பட்ட செயலதிகாரத்தை உறுதி செய்திருந்தும், இந்தியாவின் நீதி அமைப்புகள் அதில் தலையிட உரிமையில்லாதிருந்தும், தேர்தலை நடத்துவதற்கு எண்ணற்ற சவால்களை தேர்தல் ஆணையம் சந்திக்கிறது என்பதை ஒரு சிலர் அறிவார்கள்.

இந்தியாவில் தேர்தல் நடத்தப்படும்போது நிகழும் நிகழ்வுகளில் நம்மால் கொண்டாடப்படாத தேர்தல் ஆணையத்தின் பணியாளர்களின் பணிக்குப் பின்னே மறைந்து கிடக்கும் காட்சிகளையும் அவர்கள் சந்திக்கும் உன்னதமான சவால்களையும் இந்தப் புத்தகம் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்தக் கதைகள் சாதாரண மக்களின் கதைகள். அவர்களுடன் பின்னிப்பிணைந்த இந்திய தேர்தல் ஆணைய பணியாளர்கள், பாதுகாப்புத் துறையினர், வேட்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், காவல்துறை, எல்லாவற்றுக்கும் மேலாக நம்புவதற்கரிய தைரியத்தை வெளிப்படுத்தியும் உலகின் மிகவும் சிக்கலான மற்றும் கடினமான தேர்தலான இந்தியத் தேர்தல் செயல்பாட்டுக்கான தூண்டுகோலாகவும் இருக்கும் இந்திய வாக்காளர்கள் ஆகியோரைப் பற்றிய கதைகள்.

மனிதனின் சுதந்திரத்துக்கான முடிவற்ற தேடலில் மனிதகுல எழுச்சியின் வெற்றியைக் கொண்டாடுகிறது இப்புத்தகம்.