தப்பு
நாராயணி கண்ணகி எழுதிய தப்பு - பாலியல் வன்கொடுமை, அறம், நீதி குறித்த நாவல். பெண்ணின் வலி, சமூகத்தின் தப்புக்களைப் பற்றி பேசும் ஒரு முக்கியமான புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
Description
எந்த நியாயத்தையும் தப்பாக்கிவிட முடியும். ஆனால் எந்தத் தப்பையும் நியாயமாக்கிவிட முடியாது. பிரபஞ்சத்தின் உச்சபட்சப் பாவச்செயல் பாலியல் வன்கொடுமை. ஒரு பெண்ணின் உள்ளத்திலிருந்து எப்படிப்பட்ட ரணத்தையும் ஆற்றிவிடலாம். உடல் களவுபோன ரணமானது உலகே அழிந்தாலும் கருகாமல் கனன்றிருக்கும். ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைப் பேசத் தொடங்கும் முன் ஆயிரம் பெண்கள் சிதைகிறார்கள். அறம், நீதி, தர்மம் எல்லாம் லட்சத்தில் ஒன்றாகிவிட்டது. தப்பைச் சந்திக்காத மனிதர் எவருமில்லை. தெரிந்தே செய்யும் தப்பு, தெரியாமல் செய்யும் தப்பு, மன்னிக்கக் கூடிய தப்பு, மன்னிக்கக் கூடாத தப்பு, தண்டனையிலிருந்து தப்பித்துவிடுகிற தப்பு, தப்பு, தப்பு, தப்பு. கடலில் எவ்வளவு உப்பு? மனிதரில் அவ்வளவு தப்பு.