உ. வே. சா: பன்முக ஆளுமையின் பேருருவம்
உ.வே.சா எழுதிய பன்முக ஆளுமையின் பேருருவம் - உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை, படைப்புகள் மற்றும் தமிழ் இலக்கிய ஆய்வுகளில் அவரது பங்களிப்பை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 216 |
| Year | 2005 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
பழந்தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் நிலைபேறுடைய பெயர் உ.வே. சாமிநாதையர். பதிப்பு நுட்பங்களைத் தம் அனுபவத்தின் மூலமாக அறிந்து செம்மையாகச் செய்த அவர் பல்வேறு தளங்களில் ஆளுமை கொண்டவர். மிகுந்த புலமையாளர், உரையாசிரியர், உரைநடை எழுத்தாளர், தம் காலச் செய்திகளைப் பதிவாக்குவதில் பெரு விருப்புடைய ஆவணக்காரர், சிறந்த ஆசிரியர் என அவரைப் பலவாறு கணிக்கலாம். அவர் தம் துறை சார்ந்த சார்புகளும் உடையவர்.
அவரையும் அவரது பணிகளையும் மதிப்பிடும் கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூலில், தமிழ் ஆய்வுக்களத்தில் நல்ல பங்களிப்புகளைச் செய்த அறிஞர்களின் கட்டுரைகளும் சம கால எழுத்தாளர்களின் கட்டுரைகளும் ஒருசேரத் தொகுக்கப்பட்டுள்ளன.