நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் - நாஞ்சில்நாட்டு சமூக வரலாறு, மருமக்கள்வழிமுறை மற்றும் வெள்ளாளர் குறித்த அரிய தகவல்களின் ஆய்வுப் பதிப்பு.
| Category | History |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 248 |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
1942இல் மருமக்கள்வழி மான்மியம் நூலாக வெளிவந்தபோது பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை எழுதிய முன்னுரை, மான்மியத்தை வெளியிட்ட ‘தமிழன்’ இதழாசிரியர் பண்டித எஸ். முத்துசாமிப் பிள்ளையின் அறிமுகவுரை, நாஞ்சில்நாட்டில் மருமக்கள்வழிமுறை ஏற்படுத்திய சமூக முரண்பாடுகள் பற்றிய வரலாற்றுச் செய்திகளடங்கிய பதிப்பாசிரியரின் விரிவான ஆய்வுரை, இதுவரை நூல்வடிவம் பெறாத வெள்ளாளர் பற்றிய கவிமணியின் ஆங்கிலக் கட்டுரை சுமார் 500 அடிக்குறிப்புகள் அடங்கிய விரிவான ஆய்வுப் பதிப்பு. கி. ராஜநாராயணன் அவர்களின் வாழ்த்துரையுடன்.