மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
ய. மணிகண்டன் எழுதிய மணிக்கொடி மரபும் பாரதிதாசனும் - தமிழ் நவீனத்துவம், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் மணிக்கொடி மரபில் புதுமைப்பித்தன் போன்றோரின் பங்களிப்பை அறிய சிறந்த நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தமிழ் நவீனத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படும் ‘மணிக் கொடி’க்கும் திராவிட இயக்கக் கவிஞராகக் கொண்டாடப்படும் பாரதி தாசனுக்குமான உறவை ஆராயும் நூல் இது. பாரதிதாசனையும் அவருடைய கவிதைகளையும் மணிக்கொடி மரபினரான புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., சி.சு. செல்லப்பா முதலானோர் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை விளக்குகிறார் ய. மணிகண்டன். கெட்டிதட்டிப்போன மனப்பதிவுகளையும் முன்னெண்ணங்களையும் ஏராளமான புதிய செய்திகளோடு தகர்க்கும் சுவையான ஆராய்ச்சி நூல் இது.
- ஆ.இரா. வேங்கடாசலபதி