நான் தைலாம்பாள்
கமலா ராமஸ்வாமி எழுதிய நான் தைலாம்பாள் - தாயின் வாழ்க்கைச் சம்பவங்கள் மற்றும் கடந்த கால சமூகச் சூழலை அழகாக விவரிக்கிறது. ஒரு மகளின் நினைவுகள் நிறைந்த புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 72 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
சுந்தர ராமசாமி பற்றிய நினைவுகளின் திரட்டான ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ நூலுக்குப் பிறகு கமலா ராமசாமி எழுதி வெளிவரும் நூல் ‘நான் தைலாம்பாள்’.
தனது தாயின் வாழ்க்கை குறித்து கமலா ராமசாமி எழுதியுள்ள நூல் ஒருவகையில் புதுமையானது. அம்மா தைலாம்பாளின் கதையை மகள் கமலா விரித்துரைக்கிறார். அதுவும் அம்மாவின் குரலில். அம்மாவின் பார்வையில். அம்மாவின் விருப்பு வெறுப்புகளினூடே. சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் முதல் முக்கால் பகுதிவரை வாழ்ந்த தைலாம்பாளின் விவரிப்பில் படர்ந்து தெரிவது அவரது சொந்த வாழ்க்கை மட்டுமல்ல: அந்தக் காலத்தின் இயல்பு; அந்த மனிதர்களின் மனம்.
-சுகுமாரன்