Skip to content

ஒரு புளியமரத்தின் கதை

சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை - நவீன இலக்கியத்தின் சிறந்த படைப்பு! இந்த நாவல், வாழ்வின் அர்த்தம் மற்றும் சமூக விமர்சனத்தை ஆழமாகப் பேசுகிறது.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 224
Year 2017
Format Paperback
Tags Life and Society

Description

1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு புளியமரத்தின் கதை’ குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே. எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசுபெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார்.