Skip to content

ஜெயலலிதா: மனமும் மாயையும்

விலையடக்கப் பதிப்பு

வாஸந்தி எழுதிய ஜெயலலிதா: மனமும் மாயையும் - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை, அரசியல் மற்றும் அறியப்படாத பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Category Autobiography
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 344
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நூலை "ஜெயலலிதா: மனமும் மாயையும்" என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளரும் இதழாளருமான வாஸந்தி எழுதியுள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பாக ஜெயலலிதாவின் வரலாற்றை வாஸந்தி ஆங்கிலத்தில் எழுதி, வெளியாகவிருந்த நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா. அதையடுத்து அந்த நூலின் வெளியீடு தடை செய்யப்பட்டதோடு, இன்னும் வெளிவராமலேயே இருக்கிறது.

இப்போது நேரடியாக தமிழிலேயே எழுதப்பட்டுள்ள இந்த நூலில், தான் நீண்ட காலமாகத் திரட்டிய தகவல்களின் மூலம் ஜெயலலிதாவின் வாழ்வை ஆராய்வதோடு, அறியப்படாத அவரது பல பக்கங்களையும் முன்வைக்கிறார் வாஸந்தி.