எம். எஸ். காற்றினிலே கரைந்த துயர்
டி. எம். கிருஷ்ணா எழுதிய எம். எஸ். காற்றினிலே கரைந்த துயர் - எம். எஸ். சுப்புலட்சுமியின் உண்மையான ஆளுமையை வெளிப்படுத்தும் நூல், புதிய பார்வைகளைத் தருகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
எம். எஸ். சுப்புலட்சுமி பற்றி டி. எம். கிருஷ்ணா எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்று பெரும் விவாதத்துக்கும் தாக்குதலுக்கும் உள்ளானது. அந்தக் கட்டுரையின் மொழியாக்கம் காலச்சுவடு 2016, மே இதழில் வெளியானது. சமீபத்தில் டி. ஜே. எஸ். ஜார்ஜ் எழுதிய 'எம். எஸ். வாழ்க்கை வரலாறு' நூலின் தெலுங்கு மொழியாக்க நூல் வெளியீட்டில் கலந்துகொண்ட கிருஷ்ணா கூறிய சில கருத்துகள் சர்ச்சைக்குள்ளாயின.
இந்தப் பின்னணியில் டி. எம். கிருஷ்ணாவின் கட்டுரை தற்சமயம் நூல் வடிவம் பெறுகிறது, அவரது முன்னுரையுடன். எம். எஸ். குறித்துப் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பார்வையையும் பிம்பங்களையும் கேள்விக்குட்படுத்தும் இந்நூல் அந்த மகத்தான கலைஞரின் நிஜ ஆளுமையை வெளிக்கொணர்கிறது.