Skip to content

காவேரிப் பெருவெள்ளம் (1924)

படிநிலைச் சாதிகளில் பேரழிவின் படிநிலை

கோ. ரகுபதி எழுதிய காவேரிப் பெருவெள்ளம் (1924) - 1924ஆம் ஆண்டு வெள்ளத்தின் தாக்கம், சாதி வேறுபாடுகள், மற்றும் தமிழகத்தில் ஏற்பட்ட பேரழிவுகளைப் பற்றி அறிய இந்நூலைப் படியுங்கள்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 240
Year 2020
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பெருவெள்ளம் கேரளத்தில் (2018) விளைவித்த பேரழிவால் மலையாளிகள் 1924ஆம் ஆண்டு வெள்ளத்தை நினைவுகூர்ந்தனர். அது உண்மையென்னவென்றால், அவ்வெள்ளம் கேரளத்தைவிட தமிழகத்தையே திக்குமுக்காடச் செய்தது. மேற்குமலையில் பெய்த மாமழை அங்கு தங்காமல் பொலபொலவெனத் தரையிறங்கி பவானி, காவேரி, கொள்ளிட நதிகளில் புலியாய்ப் பாய்ந்து ஆறுகளைப் பிளந்து, பாலங்களைப் பெயர்த்து, புவியைக் கீறி, சாலையைச் சல்லி சல்லியாக்கிக் குழியையும் குவியையும் மேற்குமலையடிவாரம் தொடங்கி கிழக்குக் கடற்கரைவரை பேரழிவை விளைவித்தது. சாதிப்படிநிலைக்கேற்ப வாழிடம் கட்டப்பட்டிருந்தாலும் பெருவெள்ளம் அக்ரஹாரம் முதல் சேரிவரை வாரிச் சென்றது. இருப்பினும், படிநிலைச் சாதியம் மீண்டும் புனரமைக்கப்பட்டதை இந்நூல் விவாதிக்கிறது. சாமி சிலைகளைச் சாலைக்கு இழுத்து தமிழகத்தில் பத்தாயிரம்பேரைக் கொன்று பலரை அநாதைகளாக்கிய பெருவெள்ளத்தைப் பற்றி பிராமணர், செட்டியார், முதலியார், நாயுடு, நாயகர், சாயுபு எனப் பலரும் சிந்து பாடினர். இப்பெருவெள்ளச் சிந்துகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.