தமிழரின் உருவ வழிபாடு
எஸ். ஏ. வி. இளஞ்செழியன் எழுதிய தமிழரின் உருவ வழிபாடு - தமிழரின் வழிபாட்டு முறைகள், வரலாறு மற்றும் கந்துவழிபாட்டின் பரிணாமத்தை அறிய சிறந்த புத்தகம்.
| Category | History |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
கந்து எனும் மரத்தறியே ஆதியில் வழிபடப்பட்ட அரூபம். கடம்பமரக்கந்துவில் உறைந்த இறைவன் கந்தனும் கடம்பனுமானான். கந்துவழிபாடு காலப்போக்கில் மேற்கூரையுடனான அறையுடன் ‘கந்துடைப்பொதியில்’ எனப் பரிணாமம் காண, அதன் கடைசி எச்சத்தைக் கரிகால்சோழனின் காலத்தில் அறிவியலும். கந்துவின் அடுத்தப் பரிணாமமான கந்திற்பாவை; அரையரூபம் காட்டி பூதத்தாழ்வாரை உசுப்பேற்ற; “தொன்மத்தில் வெவ்வேறு வடிவம் காட்டுகிற உன்னை, அவற்றிற்கான சிற்ப வடிவங்களின் மூலம் காணப் பேராவல் மிகுத்துள்ளேன் - ஆவணசெய்” எனத் திருமாலிடம் முறையிடுகிறார். பொய்கையாழ்வாரோ “உலகளந்தமூர்த்தி உருவேமுதல்” எனத் தமிழகத்தில் முதன்முதலாக உருவத்திற்குள் நுழைந்த வடிவத்தினை ஆவணப்படுத்தியுள்ளார். இவ்வாறு ஏராளமான அரிய சிறப்புத்தரவுகளுடன் இந்நூல் தமிழரின் உருவவழிபாட்டு மரபினை விரிவாக வரலாற்றின் கோணத்தில் பேசுகிறது.