Skip to content

அமாவும் பட்டுப்புறாக்களும்

ஜோசலின் கல்லிட்டி எழுதிய அமாவும் பட்டுப்புறாக்களும் - லக்னோவின் வீழ்ச்சி, பேகம் அஸ்ரத் மகலின் வீரம், போர் கால வாழ்வை நுட்பமாகச் சித்தரிக்கும் வரலாற்று நாவல்.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 285
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

1856. அவத் ராஜ்ஜியத்தின் தலைநகரமான லக்னோ கிழக்கிந்தியக் கம்பெனியின் பேராசைக் கரங்களுக்கு இலக்காகிறது; நவாப் கல்கத்தாவில் கம்பெனியின் உயரதிகாரிகளைச் சந்திக்கக் கோரிக்கை மனுவோடு முகாமிட்டிருக்கிறார்; அவரின் தாயாரோ லண்டனில் விக்டோரியா மகாராணியின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்; இந்தச் சூழலில் நவாப்பின் இரண்டாம் மனைவியும், காமக் கிழத்திகளில் ஒருத்தியாகவே வாழ்ந்துகொண்டிருப்பவருமான பேகம் அஸ்ரத் மகல் தனது இளம்வயது மகனுக்கு முடிசூட்டி மக்கள் மனதில் நம்பிக்கையை ஊட்டி லக்னோவை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

இந்தக் காலகட்டச் சம்பவங்களை, நவாப் குடும்பத்தின் நம்பிக்கைக்குக்குரியவளும் அவரது கருவூலத்தின் பாதுகாவலாளியும் தாய் வழியில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவளும் போராளியுமான அமா என்ற இளம்பெண்ணின் வாழ்வனுபவங்களாக நாவல் விரிக்கிறது. போர்ச்சூழலின் வக்கிரமான புற அழிபாடுகளைப் பற்றிய விவரணைகள் போர்க்களத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன; மனித உணர்வுகள், வாழ்க்கை மதிப்பீடுகள் இவற்றிற்குப் போர் விடுக்கும் சவாலும் நெருக்கடியும் அதை மனிதர்கள் எதிர்கொள்ளும் விதமும் காத்திரமான பாத்திரங்களின் மூலம் நாவலில் நுட்பமாக வெளிப்படுகின்றன. இந்திய வரலாற்றின் கொந்தளிப்பான அத்தியாயம் ஒன்றின் கலைப்பதிவு இந்நாவல்.