Skip to content

உரக்கப் பேசு

சப்தர் ஹாஸ்மியின் மரணமும் வாழ்வும்

சுதன்வா தேஷ்பாண்டே எழுதிய உரக்கப் பேசு - சப்தர் ஹஷ்மியின் வாழ்க்கை, அரசியல் நாடக வரலாறு மற்றும் வீதி நாடகங்களின் முக்கியத்துவத்தை அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

கலை சார்ந்த நாடகங்களைப் போலவே அரசியல் நாடகங்களுக்கும் இங்கே தனித்த வரலாறு உண்டு. அரசியல் நாடகங்கள் பெரும்பாலும் வீதி நாடகங்களாகவே இருந்திருக்கின்றன. அதன் முக்கிய நோக்கமாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது இருந்ததுதான் இதற்குக் காரணம். வீதி நாடக வடிவங்களை முன்னெடுத்த இடதுசாரி நாடகக் கலைஞரும் எழுத்தாளருமான சப்தர் ஹஷ்மியின் நெருங்கிய நண்பரான சுதன்வா தேஷ்பாண்டே எழுதிய புத்தகம் இது. சப்தர் ஹஷ்மியின் வாழ்வையும் மரணத்தையும் உடனிருந்து கண்ட சுதன்வா தேஷ்பாண்டே தன்னுடைய நினைவுகளின் மூலமும், நண்பர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும் இந்த நூலை எழுதியிருக்கிறார். நாடகத் துறையில் தொடர்ந்து இயங்கிவரும் அ.மங்கை இந்நூலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.