நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் (பாரதி புத்தகாலயம்)
ஜமாலன் எழுதிய நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் - சமகால அரசியல், இலக்கியம், பண்பாடு குறித்த ஆழமான மார்க்சியப் பார்வையை வழங்குகிறது. நவீன மனிதமைக்கான புதிய தேடல்கள் இதில் உள்ளன.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
ஜமாலன் 1984 முதல் மார்க்சியம், இலக்கியம், அரசியல், மதவாத எதிர்ப்பு அரசியல், பின்காலனியம், பின் நவீனத்துவம், சினிமா போன்ற பல துறைகளில் எழுதி வருபவர். கோட்பாடு சார்ந்த திறனாய்வுகள் மற்றும் தமிழியல் ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருபவர். கணினித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் திறனாய்வு வெளியிலும், இடதுசாரி பண்பாட்டு அரசியலிலும் ஈடுபாடு கொண்டு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருபவர். சிறந்த திறனாய்வாளருக்கான விருதும் பெற்றுள்ளார். இவரது உடலரசியல் நூல் சிறந்த திறனாய்வு மற்றும் கோட்பாட்டு நூலுக்கான 'பஞ்சு பரிசில்' பெற்றுள்ளது.
இந்த முழு நூலையும் படிப்பது சமகாலத்தில் தனி மனிதத் தன்னிலைக்கு ஒரு வரலாற்று அறிவைக் கொடுக்கிறது. இன்றைய புத்தகச் சந்தைகளின் நூலகங்களின் புழங்குமிடங்கள், கலை இலக்கியம், அரசியல், உலக நடத்தைகள், அதன் பண்பாட்டு விஞ்ஞான வளர்ச்சிகள், பயங்கரவாதங்கள், ஏகாதிபத்திய சக்திகள் வழியாக ஒரு பிரதேச மனிதனை உலக மனிதனாக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றன. அந்த உலக மனிதன் யார் எனும் இடத்தில்தான் தொடங்குகிறது ஜமாலனின் இக்கட்டுரைகள், மிக விரிவாக எழுதவேண்டிய பல அம்சங்கள் இதில் இருக்கின்றன என்றாலும் இத்தகைய தொகுப்புகள் கவனம்பெறாமல் போவது தமிழ்ச்சூழல் பற்றிய அயர்ச்சியைத்தான் தருகிறது.
ஏறக்குறைய 1990களில் தொடங்கி 2010 வரை சுமார் இருபதாண்டுகளில் ஜமாலனால் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் மதம், பாலியல்பு, பெண், பொருளாதாரம், கலை போன்றவற்றின் பூர்ஷ்வா மாயைகளைக் களைந்து மார்க்சிய அறிவுத்தோற்ற விளக்கத்தில் நவீன மனிதமையை மீளுருவாக்கம் செய்வதாகக் கூறலாம். நவீனத்துக்கான அறம் பற்றிய உரையாடல்கள்.
-யவனிகா ஸ்ரீராம்