நக்சல்பாரி – சொல்லப்படாத கதைகள்
கி. நடராசன் எழுதிய நக்சல்பாரி - சொல்லப்படாத கதைகள் - ஒடுக்கப்பட்டோரின் வலி, அதிகாரத்தின் அத்துமீறல் மற்றும் புதிய வசந்தத்திற்கான அறைகூவல் நிறைந்த சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
Description
இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள் ஒடுக்கப்பட்டோரின் கலகக் குரலாய் ஒலிக்கிறது. கலை கலைக்காகவே என்பதை அடித்து நொறுக்கி, கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என உலகிற்குப் பறைசாற்றுகிறது. ரோஜாவை மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டோரின் மனங்கள் பற்றி எரிந்து சிவந்து எரிந்து ஒளிருவதை உணர்வுகள் ததும்ப இச்சிறுகதைகள் பேசியுள்ளது. இச்சிறுகதைகள் சாமானிய மனிதர்களை, அதிகாரத்துக்கு எதிரானவர்களை காவல்துறையினர் அவர்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் இரக்கமின்றி அத்துமீறுகிறது என்பதைக் காட்டமாக வெளிப்படுத்துகிறது. புதிய மானுட வசந்தத்தை வரவேற்கும் வசந்தத்தின் இடி முழக்கம், அறத்தின் சீற்றம் இந்த சிறுகதைகள்!
