அவதூதர்
க. நா. சு. நூற்றாண்டு சிறப்பு வெளியீடு
க. நா. சு. எழுதிய அவதூதர் - சமூக நம்பிக்கைகள், அதிசயங்கள் நிறைந்த ஒரு நாவல். இந்தப் புத்தகம் வாசகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும், சிந்தனையைத் தூண்டும் படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 240 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
'அவதூதர்' நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்திலிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக்கும் போது சில மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள். முக்கியமாக அவதூதர் சித்து விளையாடுவதாய் வருகிற இடங்களை மாற்ற வேண்டும். பகுத்தறிவுக்கு இந்த அதிசயங்கள் ஒத்துவரவில்லை என்றார்கள். இந்த நம்பிக்கைகள், அதிசயங்கள் இந்தச் சமுதாயத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளவை என்று சொல்லி நான் மறுத்துவிட்டேன்.
- க. நா. சு.