நாகம்மாள் (நற்றிணை பதிப்பகம்)
மகத்தான நாவல் வரிசை
ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதிய நாகம்மாள் - நற்றிணை பதிப்பகம் நாவல், பெண்ணின் சுயசிந்தனை மற்றும் சுதந்திரத்தை வலியுறுத்தும் ஒரு சிறந்த படைப்பு. சமூகப் பிரச்சினைகளை அலசுகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Gender and Equality |
Description
நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால் அவற்றில் வரும் பெண்களுக்குச் சுயமுகம் எதுவுமில்லை. ஆண்கள் பரிதாபப்பட்டு வழங்கும் அடையாளங்களைத் தரித்தவர்களாகவே அவர்கள் உள்ளனர். நாகம்மாளை அந்த வரிசையில் சேர்க்க முடியாது. தன் சுதந்திரத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் தன் சக்திக்கு உட்பட்டுக் கலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடையவளாக நாகம்மாள் விளங்குகிறாள்.
- பெருமாள்முருகன்.