Skip to content

மகாநதி

பிரபஞ்சன் எழுதிய மகாநதி - வாழ்க்கையின் பேரழகையும், சவால்களையும் உணர்த்தும் நாவல். இந்த கதை, உங்களை உணர்ச்சிப்பூர்வமான அனுபவத்தில் ஆழ்த்தும். மகாநதி நாவல் வாங்குங்கள்!

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

வாழ்க்கை எனும் மகாநதி, பொங்கிப் பிரவகித்து, மூர்க்கமும் மூர்த்தன்யமும் பொருந்த, திகிலேற்றுகிற மோகினிக் கவர்ச்சியுடன் நடந்து செல்லும் பேரழகை நீங்கள் என்றேனும், ஓர் கணமேனும் தரிசித்ததுண்டா?

நான் அதை அனுபவித்திருக்கிறேன். குலைநடுங்க, மேனிபுளகம் உற, அச்சத்தால் உலர்ந்து, சந்தோஷத்தால் கிளர்ந்து, பெருவிருப்போடு உயிர் தோய்ந்து நான் அனுபவித்திருக்கிறேன். இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் மகாநதி, ஒரு கணம் சட்டென்று உறைந்து நின்று, பின்னர் பெருக்கெடுத்தால் எப்படி இருக்கும்? அதி அற்புத அனுபவம் அது! அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவே இந்த நாவல்.

- பிரபஞ்சன்