மறுவாசிப்பில் மரபிலக்கியம்
சங்க காலம் முதல் பாரதிதாசன் வரை
ந. முருகேச பாண்டியன் எழுதிய மறுவாசிப்பில் மரபிலக்கியம் - மரபிலக்கியத்தின் முக்கியத்துவத்தையும், நவீன இலக்கியத்தில் அதன் பங்களிப்பையும் அறிய ஒரு சிறந்த புத்தகம். தமிழ் இலக்கியம் குறித்த புதிய பார்வை!
| Category | Essay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
நவீன இலக்கியவாதிகளுக்கும் மரபிலக்கியங்களுக்கும் இடையில் கண்களுக்குப் புலப்படாத பெரிய சுவர் உள்ளது. உலகத்து நவீனப் படைப்பாளர்களின் உன்னதமான படைப்புகளை ஆர்வத்துடன் வாசிக்கின்றவர்கள் மரபிலக்கியப் படைப்புகளை அந்நிய வஸ்து போலப் புறக்கணிக்கின்றனர். நவீன இலக்கியவாதிக்கு மரபிலக்கியம் எதிரானது அல்ல. ஒரு வகையில் நேசமானது. தமிழ் மரபின் எச்சங்கள் பதிவாகியுள்ள பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை வாசிக்க வேண்டிய தேவை வலுவடையும் நிலையில் புதிய தடத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் நவீனப் படைப்பாளிக்குத் தான் செல்ல வேண்டிய திசைவழி புலப்படும்.