Skip to content

சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்

ஜெயமோகன் எழுதிய சுந்தர ராமசாமி: நினைவின் நதியில் - சு.ரா.வின் வாழ்க்கை, தத்துவம் மற்றும் அழகியல் குறித்த ஆழமான நினைவுகள் நிறைந்த ஒரு படைப்பு.

Category Essay
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 240
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில், ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ராவைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த இந்நூலின் முதல் பகுதி உயிர்மை இதழில் வெளிவந்தபோது வாசகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சு.ராவின் நினைவுகளைப் பல்வேறு தளங்களில் விரித்து எழுதிய இந்நூல் அவரைப் பற்றிய படைப்பூக்கமுள்ள ஓர் ஆவணமாகத் திகழ்கிறது.