ஹே ராவண்!
₹200₹190
ஒரு நூறு காதல் கவிதைகள்
லீனா மணிமேகலை எழுதிய சிச்சிலி - கவிதைகளின் ஆழமான அனுபவம், உணர்ச்சிகரமான வரிகள், மற்றும் ஆன்மாவைத் தேடும் பயணத்தை வழங்கும் ஒரு தனித்துவமான படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
நான்
உன் விரல்களுக்கிடையே வளரும் தாவரம்
உன் நடுங்கும் மூச்சுக்காற்றில் அடிக்கும் அலை
உன் அக்குள் முடியில் பரவும் பொடுகு
உன் மடித்த நாக்கில் உறையும் உப்பு
உன் மார்பில் நகரும் மழைமேகம்
உன் கால்களில் வெடிக்கும் பித்தம்
உன் குருதிக் கால்வாய்களில் குஞ்சு பொரிக்கும் மீன் என்னைத் தேடுபவர்கள்
உன் எலும்பின் சுதையை சுரண்டித்தான் எடுக்க வேண்டும்
என்னைப் புதைக்கவா எரிக்கவா எனக் கேட்பார்கள்
உன் ஆன்மாவின் முப்பத்தியெட்டாவது அறைச் சுவரின்
வலப்பக்க ஓரத்தில்
எளிதில் பெயர்த்து எடுத்துவிட முடியாத
ஓவியமாக என்னை மாட்டிவிடு
-லீனா மணிமேகலை