ஏழுதலை நகரம் (தேசாந்திரி)
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ஏழுதலை நகரம் (தேசாந்திரி) - குழந்தைகளுக்கான இந்த நாவல், பால்ய கால நினைவுகளைத் தூண்டி, அழகான கதைகளை வாசிக்கத் தூண்டும் ஒரு படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப் பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எழுதுவது இவை யாவையும் தாண்டி எனது பால்ய கால கதைகளின் சாலையில் கொஞ்சம் சுற்றி வர வேண்டும் என்ற ஆசை துளிர்க்கத் துவங்கியது. அப்படித்தான் இந்தக் குழந்தைகளுக்கான நாவலை எழுதத் துவங்கினேன்.
- எஸ். ராமகிருஷ்ணன்