Skip to content

கோபல்ல கிராமம்

கி. ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமம் - கரிசல் மக்களின் வாழ்க்கை, பேச்சு வழக்கு, மற்றும் சமூகப் பிரச்சினைகளை அழகாகச் சித்தரிக்கும் ஒரு நாவல்.

Category Novel
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 176
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.