Skip to content

கோவில் நுழைவுப் போராட்டம்

ராம் தங்கம் எழுதிய கோவில் நுழைவுப் போராட்டம் - தீண்டாமைக்கு எதிரான போராட்ட வரலாறு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டிய நூலின் முக்கியத்துவம்.

Category History
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 624
Year 2026
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தீண்டாமைப் பெருங்கொடுமைகளை எதிர்த்தும், அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டவும் தென்னிந்தியாவில் நிகழ்த்தப்பட்ட போராட்டங்களும் சத்தியாகிரகங்களும் தனித்துவமானவை. இந்திய வரலாற்றையே மாற்றியமைத்தவை. கோவில்களை மையமாகக் கொண்டு சனாதன இந்துக்கள் செலுத்திய ஆதிக்கத்தை மழுங்கச் செய்து, அஹிம்சை வழியில் நின்று வென்ற அறியப்படாத மாபெரும் தலைவர்களை இந்த நூல் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (வைக்கம், பாலக்காடு, குருவாயூர், சுசீந்திரம்) நிகழ்த்தப்பட்ட கோவில் நுழைவுப் போராட்டங்களை ரத்தமும் சதையுமாக அதே கதகதப்புடன் காட்சிப்படுத்துகிறது.

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், அந்தப் போராட்ட வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயத்தைத் திறம்பட விவரிக்கும் மிக முக்கியமான ஆவணமாக இந்த நூல் நிலைத்திருக்கும்.

-முகில், எழுத்தாளர்.