கோவில் நுழைவுப் போராட்டம்
ராம் தங்கம் எழுதிய கோவில் நுழைவுப் போராட்டம் - தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள், கோவில் நுழைவுப் போராட்ட வரலாறு மற்றும் சமூக நீதிக்கான நூலை அறிந்திடுங்கள்.
| Category | History |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 624 |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தீண்டாமைப் பெருங்கொடுமைகளை எதிர்த்தும், அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டவும் தென்னிந்தியாவில் நிகழ்த்தப்பட்ட போராட்டங்களும் சத்தியாகிரகங்களும் தனித்துவமானவை. இந்திய வரலாற்றையே மாற்றியமைத்தவை. கோவில்களை மையமாகக் கொண்டு சனாதன இந்துக்கள் செலுத்திய ஆதிக்கத்தை மழுங்கச் செய்து, அஹிம்சை வழியில் நின்று வென்ற அறியப்படாத மாபெரும் தலைவர்களை இந்த நூல் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (வைக்கம், பாலக்காடு, குருவாயூர், சுசீந்திரம்) நிகழ்த்தப்பட்ட கோவில் நுழைவுப் போராட்டங்களை ரத்தமும் சதையுமாக அதே கதகதப்புடன் காட்சிப்படுத்துகிறது.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், அந்தப் போராட்ட வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயத்தைத் திறம்பட விவரிக்கும் மிக முக்கியமான ஆவணமாக இந்த நூல் நிலைத்திருக்கும்.
-முகில், எழுத்தாளர்.