ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ். ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
ஜீவி எழுதிய ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ். ரா. வரை - சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த ஆழமான விமர்சனங்கள் மற்றும் வாசிப்பனுபவம் நிறைந்த நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 264 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Cultural Heritage |
Description
ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும் எழுதி வருகிறார்.
தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்து வருகிறார் ஜீவி என்கிற ஜீ. வெங்கட்ராமன். சென்னையில் வசித்து வரும் இவருக்கு வயது 73.
தனது வாசிப்பனுபவம் மூலமாக கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல்.
உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி ஒரு எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்து கொள்கிறார்.