அமைதியின் அன்னை
அவர்களின் கண்ணீரை கடவுள் நீக்கிவிடுவார்
ஹாக் ஜா ஹான் மூன் எழுதிய அமைதியின் அன்னை - உலக அமைதி, மனிதநேயம், இன ஒற்றுமைக்கான ஒரு உத்வேகம் தரும் சுயசரிதை. பசி, பட்டினி தீர்க்கும் வழிகளையும் அறியலாம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
Description
கொரியாவைச் சேர்ந்த ஹாக் ஜா ஹான் மூன் உலக அமைதிக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். மத, இன பகைமைகளை வேரறுத்து மனித நல்வாழ்வுக்காக வெவ்வேறு இனங்களுக்கிடையேயான திருமண உறவுகளை ஏற்படுத்தி வந்தவர். ஆப்ரிக்க வட அமெரிக்க நாடுகளின் பசி, பட்டினிக்குத் தீர்வு கண்டவர். சன்ஹாக் அமைதிப் பரிசு வழங்கும் அமைப்பையும் பல கல்வி நிறுவனங்களையும் தொழிற் கூடங்களையும் உருவாக்கியவர். ஐக்கியப்படுத்தும் திருச்சபையை உலகெங்கும் நிலைநிறுத்தி வருபவரும் இவரே. கோர்பச்சவ் முதல் அப்துல்கலாம் வரை பல்வேறு உலகத் தலைவர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றவர். இவரது சுயசரிதையை அமெரிக்காவின் வாஷிங்டன் டைம்ஸ் நிறுவனம் ஆங்கில, சீன, கஜகிஸ்தான் மொழிகளில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்திய மொழிகளில் முதன் முதலாக தமிழில் இந்த சுயசரிதையை வாஷிங்டன் டைம்ஸ் வெளியிடுகிறது.