பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்
உலக இதிகாசங்களில் குழந்தைகள்
ரோஹிணி சவுத்ரி எழுதிய பெர்சியாவின் மூன்று இளவரசர்கள் - இதிகாசக் கதைகள், புராணங்கள் மற்றும் வீரர்களின் சாகசங்களை சிறுவர்களுக்கான மொழியில் அறியலாம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 200 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
கிரேக்கம், ரோமானியம், நார்வே, செல்டிக், எகிப்து, அமெரிக்கப் பழங்குடியினம், ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆசியப் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் புகழ்வாய்ந்த புராணங்களில் இருந்து, இருபது இதிகாசக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. சிறுவர்களே இக்கதைகள் அனைத்திலும் நாயகர்களாக வலம்வருகின்றனர் என்பதே இந்நூலின் சிறப்பம்சமாகும்.
புகழ்பெற்ற வரலாற்று வீரர்களான ஹோரஸ், பாண்டவர்கள், ஹெராகிள்ஸ், ரோமுலஸ், ரெமஸ் ஆகியோரின் கதைகள் இந்நூலில் உள்ளன. மேலும், பரவலாக அறியப்படாத இதிகாச வீரர்களான செல்டிக் நாயகன் குக்கோலன், டிராகனாக உருமாறிவிடும் சீனச் சிறுவனான வென் பெங், பெர்சியாவின் மூன்று இளவரசர்களான ருஸ்டம், சால் மற்றும் சவுரப் ஆகியோரைக் குறித்த கதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.