விட்டல்ராவ் சிறுகதைகள் பாகம் – 2
விட்டல் ராவ் எழுதிய விட்டல்ராவ் சிறுகதைகள் பாகம் – 2 - வாழ்க்கையின் புதிர்களைத் திறக்கும் சிறுகதைகள், தமிழிலக்கியத்தில் ஒரு முக்கியமான படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
விட்டல்ராவ் எழுதியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.வாழ்வின் ஏராளமான புதிர்த் தருணங்களின் சித்திரங்கள் அவருடைய படைப்புலகத்தில் உள்ளன ஓர் ஓவியக்கூடத்தில் கண்காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும் சித்திரங்களைப்போல. அப்படிப்பட்ட தருணங்களை அவர் தேடித் தேடி தம் கதைகளில் காட்சிப் படுத்துவது புதிருக்கான விடைகளைக் கண்டடைய வேண்டும் என்பதற்காக அல்ல; இந்த வாழ்க்கை புதிர்களால் தொகுக்கப் பட்டிருக்கிறது என்னும் உண்மையைப் புரிந்து கொள்வதற்காக. அதுவே அவருடைய கதைகளின் மையத் தரிசனம். அவருடைய அனைத்து சிறுகதைகளும் அடங்கிய பெருந்தொகுதி வெளிவரும் இத்தருணத்தில் அவருக்கு என் வாழ்த்துகள்.
-- பாவண்ணன்