வண்ணத்துப்பூச்சி (திரைக்கதை)
மனம் போல் பற
சி. அழகப்பன் எழுதிய வண்ணத்துப்பூச்சி (திரைக்கதை) - குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் குடும்பத்திரைப்படம்! பெற்றோரின் அன்பையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பேசுகிறது.
| Category | Screenplay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
Description
பெற்றோர்களிடம் குழந்தைகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லும் படம்.
இயக்குநர் மகேந்திரன் ‘எத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்படி ஒரு படம்’ என்று பாராட்டியதே இப்படத்தின் கருவுக்குக் கிடைத்த வெற்றி!
பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஓடி ஓடி சம்பாதிக்கும் பெற்றோர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், பணம் சம்பாதிப்பதுபோல் அன்பு செலுத்த நேரம் ஒதுக்குவதும் சம்பாத்தியமே என்பதை உணருவார்கள்.
‘குழந்தைகள் படம்’ என சான்றளித்த திரைப்பட தணிக்கைக் குழு ‘சமுதாயச் சிந்தனையோடும், அக்கறையோடும் எடுக்கப்பட்ட இப்படத்தை ஒவ்வொரு குடும்பமும் பார்க்க வேண்டும். இது பல விருதுகளைப் பெறும்’ என்று பாராட்டியது ‘வண்ணத்துப்பூச்சி’க்கு கிடைத்த அந்தஸ்து.
ஒரு திரைப்படத்தை எளிமையாகக் கொண்டு செல்வது எவ்வளவு சிரமம் என்பது படமெடுத்தால் தெரியும். இது வளரும் தலைமுறைக்கான படம். அது தன் இடத்தைத் தானே தேடிக் கொள்ளும்.