ஆரிய சமாஜம்
மலர்மன்னன் எழுதிய ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்தர் உருவாக்கிய இந்த இயக்கம், இந்து மதத்தின் வளர்ச்சி மற்றும் சமூக சீர்திருத்தங்களை விளக்குகிறது.
| Category | History |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
‘அனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது, மனு ஸ்மிருதி. அது எழுதப்பட்ட கால கட்டத்துக்கு ஏற்ப அதன் விதிமுறைகள் அமைந்திருப்பினும் அவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை எந்தக் காலத்துக்கும் ஏற்றவாறே உள்ளன. தனி மனித வாழ்வியல் ஒழுக்க விதிகளை வகுத்திருப்பதோடு, சமூகவியல், அரசியல் எனப் பொதுத்தன்மை வாய்ந்த அம்சங்களையும் உள்ளடக்கியதாக மனு ஸ்மிருதி இருப்பதால் அது ஓர் அற நூலாக மட்டுமின்றி, சட்டப் புத்தகமாகவும் நீதி நூலாகவும் ஒரு சேர விளங்குகிறது.’ - சுவாமி தயானந்த சரஸ்வதி
ஹிந்து மதத்தை மெருகேற்றி, புதுப்பொலிவுடன் மிளிரச் செய்யும் நோக்கத்துடன் சுவாமி தயானந்தர் உருவாக்கிய
இயக்கம் ஆரிய சமாஜம். அந்த இயக்கத்தின் தோற்றம் - நோக்கம்- வளர்ச்சி மூன்றையும் சுவாமி தயானந்தரின் வாழ்க்கையின் வழியே விவரிக்கிறார் நூலாசிரியர் மலர் மன்னன்.