Skip to content

சகலகலாவல்லவன்

கமலின் பிற பரிமாணங்கள் - ஓர் உரையாடல்

பரத்வாஜ் ரங்கன் எழுதிய சகலகலாவல்லவன் - கமல் உடனான நேர்காணலின் அரிய பக்கங்கள், இசை மற்றும் சினிமா அனுபவங்களை இதில் கண்டறியுங்கள். சினிமா ரசிகர்கள் தவறவிடக் கூடாத புத்தகம்!

Category Interview
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 64
Year 2013
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

"இசையையும் சினிமாவையும் இரண்டு தனிக்கூறுகளாகப் பிரிக்கும் நேரம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன். படத்தில் பாடல்களை வைப்பது ஒருவகையில் நியூசன்ஸ்தான். நாம் பார்வையாளர்களை அப்படிப் பழக்கப்படுத்திவிட்டோம்.”

"உன் குரலுக்கு என்ன பொருந்துகிறதோ அதை செய். மற்றவர்களைப்போல் பாட முயற்சி செய்யாதே என்று இளையராஜா சொல்வார்."

"நான் பள்ளிக்குப் போவதைத் தவிர்த்து வந்தேன். எப்போதுமே நடன வகுப்பே கதி என்று கிடந்தேன். ஆனால், நடன வகுப்பில் நிறைய பெண்கள் படித்ததற்கும் நான் நடன வகுப்பிலேயே இருந்ததற்கும் எந்த சம்மந்தமும் இல்லை."

‘தி இந்து’ நாளேட்டில் பரத்வாஜ் ரங்கனுடன் மனம் திறந்து கமல் மேற்கொண்ட உரையாடல் முதல் முறையாகப் புத்தக வடிவம் பெறுகிறது.