Skip to content

பொலிக பொலிக!

தினமலரில் தொடராக வெளிவந்த ஸ்ரீ ராமானுஜரின் சரிதம்

பா.ராகவன் எழுதிய பொலிக பொலிக! - ஸ்ரீ ராமானுஜரின் திவ்ய சரிதம், வாசகர்களைக் கவரும் சிறுகதை. ஆன்மீகத் தேடல் மற்றும் வரலாறு சார்ந்த கதை இது.

Category Autobiography
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 464
Year 2017
Format Paperback
Tags Faith and Spirituality

Description

பா. ராகவனின் சிலிர்ப்பூட்டும் மொழியில் ஸ்ரீ ராமானுஜரின் திவ்ய சரிதம் தினமலரில் 108 அத்தியாயங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளை அள்ளிக்குவித்த தொடர், இப்போது கிழக்கு பதிப்பக வெளியீடாக.

"காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்சபூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்தரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப்போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நீண்டன.

ம், ஆரம்பியுங்கள்!’ சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன.

ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளியமரமாக முன்தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். ‘பொலிக! பொலிக!’ என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, ‘இதோ புறப்பட்டுவிட்டேன்’ என்று ராமானுஜராக வந்துதித்தார்.