அம்மையும் அடுத்த ஃபிளாட் குழந்தைகளும்
சிறுகதைகள்
மணி ராமலிங்கம் எழுதிய அம்மையும் அடுத்த ஃபிளாட் குழந்தைகளும் - எளிய மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், உறவுகளின் இனிமையையும் உணர்த்தும் சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 208 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
நாம் அன்றாடம் காணும் எளிய மனிதர்களின் கதைகளே என்றென்றும் நமக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. காரணம் அவை ஒரு வகையில் நம் கதைகள். எனவே நிஜமானவையாகவும் நேர்மையானவையாகவும்கூட அவை இருந்துவிடுகின்றன. மணி ராமலிங்கத்தின் இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறு மின்னலைப் போல் சட்டென்று தோன்றி இருளைக் காணாமல் ஆக்கிவிடுகின்றன. அப்படியே நம் வாழ்வைச் சற்றே பிரகாசிக்கவும் செய்துவிடுகின்றன.
மணி ராமலிங்கம் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். 'எங்கே போனது என் அல்வாத் துண்டு', 'மக்களைக் கையாளும் கலை' உள்ளிட்ட பல முக்கியமான மேலாண்மை நூல்களை மொழி பெயர்த்துள்ளார். தற்சமயம் மும்பையில் வசிக்கிறார். இணையத்தில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். இது அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.