Skip to content

புல்புல்தாரா

பா. ராகவன் எழுதிய புல்புல்தாரா - தந்தை மகள் உறவு, ரகசியங்கள் மற்றும் துயரத்திலிருந்து விடுதலை பெறும் ஒரு பெண்ணின் கதை. வாழ்வின் புதிர்களைத் தேடும் நாவல்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Life and Society → Family and Relationships

Description

கணக்கற்ற ரகசியங்களைத் தூக்கிச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தந்தைக்கும் ஒளியை நிகர்த்த வெளிப்படைத்தன்மை கொண்ட மகளுக்குமான உறவைச் சொல்கிறது இந்நாவல்.

தனது துயரத்தின் ஒரு துளியை இறக்கி வைக்கக்கூட இடமின்றிக் கதை நெடுக அலையும் நாயகி, அத்துயரங்களின் மையப்புள்ளியைக் கண்டடையும்போது அனைத்துத் தளைகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறாள். பெரும் துயரத்துக்கும் அதன் நிழல் படியாத முழு மகிழ்ச்சிக்கும் இடைப்பட்ட பெருவெளியில் மேற்கொள்ளும் பயணத்தில் அவளுக்குப் புதிர்களின் கவித்துவம் ஒரு தரிசனமாகக் கிடைக்கிறது. வாழ்வினும் பெரும் புதிர் வேறேது?