Skip to content

தீயின் எடை (செம்பதிப்பு)

வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்

ஜெயமோகன் எழுதிய தீயின் எடை (செம்பதிப்பு) - குருஷேத்திரப் போரின் முடிவில் எஞ்சிய வஞ்சத்தையும், துயரையும் விவரிக்கும் ஒரு நாவல். போரின் உளவியல் எடை குறித்து அறிய வாசியுங்கள்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 574
Year 2021
Format Hardcover
Tags History, Politics, and Culture → War and Conflict

Description

குருஷேத்ரக் களத்தில் இருண்டவை அனைத்தும் பெய்தொழியும் இறுதி நிகழும் நாவல் இது. போரின் முடிவில் அனைத்தையும் எரித்தபடி எழுகிறது பேரனல். அது விரித்த சாம்பலைக் கரைந்து ஒழுகியபடி பொழிகிறது பெருமழை. மண் தன்னைத் தன்னைக்கொண்டே மூடிக்கொள்கிறது. மாபெரும் வயிறென ஆகிறது. அனைத்தையும் செரித்துக் கொள்ளத் தொடங்குகிறது.

எஞ்சுவதென்ன என்பது குருஷேத்ரம் எழுப்பும் வினா. எஞ்சியவை வஞ்சமும் ஆறாத்துயரும் மட்டுமே. வெற்றியும் தோல்வியும் பொருளற்றவை ஆயின. உயிர்க்கொடையும் அருந்திறல்நிகழ்வும் வீணென்றாயின. மானுடரை சருகு என எரித்து அங்கே தன்னை நிறுவிக்கொண்டது ஒரு பேரனல். தீயின் எடை அந்த அனலைப்பற்றிய நாவல்.