Skip to content

மீன்காரத் தெரு (எழுத்து பிரசுரம்)

கீரனூர் ஜாகிர் ராஜா எழுதிய மீன்காரத் தெரு - இஸ்லாமிய வாழ்க்கை, சமூகப் பிரச்சினைகள் மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் பேசும் ஒரு நாவல்.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Life and Society

Description

ஐவேளைத் தொழுகை அரபுதேசத்துப் பணம் பிரியாணி போன்ற உணவுக்கலாச்சாரம் என பொதுப்புத்தியில் உறைந்து கிடக்கின்ற இஸ்லாமியர் குறித்த கருத்தாக்கத்தை கீரனூர் ஜாகிர்ராஜாவின் மீன்காரத் தெரு நாவல் கலைத்துப் போடுகிறது. இதில் வரும் மனிதர்களும் இஸ்லாமியர்கள்தான். ஆனால் நிறத்தால், மொழியால், தொழிலால், வறுமையால், காமத்தால், வன்மத்தால் உந்தித் தள்ளப்படும் இவர்களை ஏற்கனவே தமிழில் வெளியாகியுள்ள எந்த படைப்பாக்கங்களிலும் இத்தனை வீச்சத்துடனும் தீவிரத்துடனும் வாசகர்கள் சந்தித்திருக்க இயலாது.