Skip to content

பெருந்தொற்று

ஷாராஜ் எழுதிய பெருந்தொற்று - கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தையும், தமிழக கிராமத்தில் நடந்த துயரங்களையும் சித்தரிக்கும் நாவல். சமூக, அரசியல் நிகழ்வுகளை அறியுங்கள்.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Life and Society

Description

உலகைப் புரட்டிய பேரதிர்வுகளைத் தந்த, இன்னும் தீராத கொடுந்துயர் - கொரோனா பெருந்தொற்று. இந் நூற்றாண்டின் மகா பேரழிவுகளில் ஒன்றான அது, தனி மனித நிலை, குடும்பச் சூழல், சமூகம், அரசியல், அன்றாட வாழ்வு, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் கடுமையான தாக்கத்தையும், சீர்குலைவுகளையும் ஏற்படுத்திவிட்டது.

இந்தப் பெருங்கொள்ளை இந்தியாவில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கிக்கொண்டிருந்த 2020-ஆம் ஆண்டு முற்பகுதியில், அதை மையப்படுத்தி நிகழ்ந்த, மத ரீதியான கலவரச் சூழலும் மறக்க முடியாதது. கொந்தளிப்பு மிகுந்த அந்த நாட்களில், ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்துவந்த தமிழக குக்கிராமம் ஒன்றில் ஏற்பட்ட கொடூரமான விளைவுகளைச் சித்தரிக்கிறது இந்த நாவல்.